Monday 6th of May 2024 06:49:05 PM GMT

LANGUAGE - TAMIL
-
முதல் முறையாக 10 தடவைகள் எவரெஸ்டில்  ஏறி சாதனை படைத்த ஆங் ரிடா காலமானார்!

முதல் முறையாக 10 தடவைகள் எவரெஸ்டில் ஏறி சாதனை படைத்த ஆங் ரிடா காலமானார்!


எவரெஸ்ட் சிகரத்தில் முதல் முறையாக 10 தடவைகள் ஏறி சாதனை படைத்த நேபாளத்தை சோ்ந்த ஆங் ரிடா ஷெர்பா காலமானார்.

நீண்ட நாட்களாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவா் தனது 72 ஆவது வயதில் நேற்று திங்கட்கிழமை உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

29,035 அடி உயரம் கொண்ட எவரெஸ்ட் சிகரத்தை 1983 முதல் 1996 வரை 10 முறை ஏறிச் ஆங் ரிடா சாதனை புரிந்தார்.

ஒக்சிஜன் உதவி இல்லாமலேயே எவரெஸ்ட்ஸ்ட் சிகரத்தில் ஏறும் திறன் கொண்டவராக இவா் இருந்தார்.

நீண்ட காலமாக மூளை மற்றும் ஈரல் நோய்களால் அவதிப்பட்டு வந்த ஆங் ரிடா ஷெர்பா, நேபாளத் தலைநகர் காத்மாண்டூவில் உள்ள தனது இல்லத்தில் நேற்று காலமானார்.

காத்மாண்டூவில் உள்ள புனித இடமான ஷெர்பா கோம்பாவில் இவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

ஆங் ரிடா ஷெர்பாவுக்குப் பின்னர் வேறு சில மலையேறு வீரர்களும் அவரது சாதனையை முறியடித்துள்ளனர். ஒருவர் 24 முறை எவரெஸ்ட்டில் ஏறி சாதனை புரிந்துள்ளார், ஆனால் இவர்களுக்கெல்லாம் முன்னோடியாக முதன் முதலில் 10 முறை எவரெஸ்ட்டைத் தொட்ட வீரர் ஆங் ரிடா ஷெர்பா என்பது குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE